Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquiculture - 2022

இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும்


இந்தியமீனவர் துன்பத்தில் குளிர்காய்ந்தபடி, இலங்கையில் இனமுரண்பாட்டை வளர்க்க முயலும் தமிழ்-குறுந்தேசிய வெறியும் இலங்கையின் கடல்வளமும்   
மணலை மைந்தன்
இன்று இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லபப்படும் நிகழ்வு, பல மட்டங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் மூன்றாம்தர இந்திய நடிகனான விஜய் என்ற கோமாளியில் இருந்து இந்திய அரசியலில் இருப்பன, ஊர்வன, பறப்பன, குரைப்பன என அனைத்துத் தரப்பினரும் இந்திய மீனவர் கொலைக்கெதிராக கிளரந்தெழுந்துள்ளனர்.
இதேபோன்று ம.க.இ.க ஆதரவு பெற்ற வினவும், புலம்பெயர் சந்தர்ப்பவாத திடீர் குறுந்தேசியவாதிகளில் இருந்து, புலிகளின் எச்சசொச்ச பாசிச கட்டமைப்புகளும், முன்னாள் இலங்கை
அரசின் அடிவருடிகளான புளட் முதல் ரீ.பீ.சீ வானொலி வரை அனைத்தும் இன்று இக்கொலைகளை அடிப்படையாக வைத்து தமது நலனில் நின்று அரசியல் செய்கின்றனர்.
இக் கொலைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டுமென்பது மானிடதர்மம் என்ற சமூக கூட்டுப்பொறுப்பு என்பதற்கப்பால் ஒவ்வொருவரின் தனிமனித கடமையும் ஆகிறது. இதன் அடிப்படையில் எவரும் இக்கொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்கலாம்.
ஆனால் இவர்களின் இக்கொலைகளுக்கெதிரான குரல் இரு இனங்களுக்கிடையிலான ஏற்கனவே இருக்கும் பிளவை
அதிகரிக்க வகை செய்வதாகவும், இலங்கை வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உலை வைப்பதாகவும் உள்ளது.
ஆம், இந்திய இடது மார்க்ஸ்சிஸ்ட்டுகள் தொடக்கம் புலம்பெயர் குறுந்தேசிய தமிழ் வலது பாசிச சக்திகள் வரை, இந்திய மீனவர் விவகாரத்தில் இவர்களால் முன்வைக்கப்படும் விவாதத்தில் இரு விடயங்களில் இவர்கள் அனைவரும் ஒன்றுபடுகின்றனர்.
முதலாவது “சர்வதேச” தமிழ்தேசியத்தை முன்னிறுத்தி மீனவர் பிரச்சனையை, சிங்கள மீனவர்களுக்கும் இலங்கை, இந்திய தமிழ் மீனவர்களுக்குமிடையிலான இனமுரண்பாடாகக் காட்ட முனைகின்றனர்.
இரண்டாவது, இந்திய மீனவர்களால் அழிக்கப்படும் இயற்கைவளங்கள் பற்றிய எந்தவித கருத்தும் இல்லாமல், வரையறையற்ற மீன்பிடித்தொழிலுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் .
இதன் அடிப்படையில் இலங்கை மீனவர் சமூகத்திற்கெதிராக, செயற்படுகின்றனர். அதன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றனர்.
இக்கட்டுரை சிலதரவுகளின் பின்னணியில் மேற்கூறிய இவர்களது இரண்டு நிலைப்பாட்டையும் கேள்விக்குட்படுத்துவதுடன், இவர்களின் அரசியல் சந்தர்ப்பவாதத்தை சாடி நிற்கின்றது.
வடபகுதியின் மீன்பிடி அபிவிருத்தி பற்றிய சிறு வரலாற்றுப் பார்வை



படவிபரம்: சிவப்புக்கோடு=இலங்கை-இந்திய  எல்லை. நீலக்கோடுகள் = இந்தியர்கள்  அத்துமீறி மீன் பிடிக்கும் இலங்கையின்  கடற்பிரதேசம் .
இலங்கைக்கு பாரிய கடற்பிரதேசம் இருந்தும், இலங்கை இன்றுவரை மீன்பிடியில் எந்தவகையிலும் அபிவிருத்தியடைந்த நாடல்ல. மீன்பிடித் தொழில் அபிவிருத்திக்கான முதல் அடித்தளம்; சிறிமாவோ பண்டாரநாயக்காவின் (1972 – 1977) பதவிக்காலத்தில் இடப்பட்டது. இக்காலப்பகுதியில் மீன்பிடி கூட்டுறவு சங்கங்களும், அகில இலங்கை மீன்பிடி தொழிலாளர் சமாசமும் உருவாக்கப்பட்டது. ஐந்தாண்டு திட்டம் தீட்டப்பட்டு, அத்திட்டத்தில் முதல் இரண்டாண்டுகள் கரையோர மற்றும் களப்புசார் மீன்பிடியை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில் இலகுகடன்கள் மீன்பிடி கூட்டுறவுச்சங்கங்களுக்கூடாக வழங்கப்பட்டது. இக்கடன்கள் வடக்கு-கிழக்கில் உபயோகிக்கும் மரவள்ளங்களையும், தெற்கில் பாவிக்கும் கட்டுமரங்களையும், வலைகளையும் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள வழங்கப்பட்டது.
அதன்பின் பதவிக்கு வந்த யூ.என்.பி. அரசு தனது திறந்த பொருளாதாரக் கொள்கைக்கேற்ப சிறிமாவோ பண்டாரநாயக்காவின் திட்டத்தை சில மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தியது. மீன்பிடித்தொழிலை ஜப்பான் நாட்டின் உதவியுடன் நவீனப்படுத்த, அந்நாட்டின் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட்டது.
இவ்வாறு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பான் நாடு தனது கடல்சார் தொழில்நுட்பத்தை இலங்கையில் சந்தைப்படுத்தும் தனியுரிமையை தனதாக்கிக் கொண்டது. அத்துடன் இலகு கடன் மூலம் ஜப்பானிய நிறுவனங்கள் சிறு வள்ளங்களுக்கும், கட்டுமரங்களுக்கும் பயன்படும் வெளியிணைப்பு இயந்திரங்களை மீனவர் கூட்டுறவுச்சங்கங்கள் மூலமாக வழங்கியது. அத்துடன் உள்ளிணைப்பு இயந்திரங்களைக் கொண்ட கரை கடந்து தொழில் செய்வதற்கான நவீன படகுகளை தனியார் வங்கிகளின் உதவியுடன் கட்டுவதற்கான ஊக்குவிப்பும் அரசினால் வழங்கப்பட்டது. இதனைச் சரியாகப் பயன்படுத்தி பாரிய நலனை அனுபவித்தோர் மன்னாரில் இருந்து வடமராட்சி வரை தொழில் புரிந்த நடுத்தரவர்க்க மீனவர்கள் என்றால் மிகையாகாது. இதற்கான முக்கிய காரணிகளாக பின்வருவனவற்றை கூறலாம்.
1. தெற்குடன் ஒப்பிடுகையில் வடக்கின் பொருளாதாரம் சிறிமாவோ காலத்தில் இருந்தே மிக நன்றாக இருந்தது. அத்துடன் சேமிப்பு பழக்கத்துடன் இணைத்த தனிநபர்களுக்கிடையிலான வட்டிக்கு வழங்கும் முறை, இலகுவாக கடன் பெற்று தொழில் நடத்த வகை செய்தது.
2. பலநூறு வருடங்களாக வடபகுதியைச் சேர்ந்த சில கிராமத்தவர் மரப்படகு கட்டும் தொழில்நுட்பமும், அனுபவமும் கொண்டவர்களாக இருந்தமை. (இவர்கள் தம் பிற்காலத்தில் யா-ஏல, மற்றும் நீர்கொழும்பு பகுதியில் மரப்படகு கட்டும் தொழிலை சிங்கள தொழிலாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார்கள்)
3. நோர்வேயினால் அறுபதாம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட சீ-நோர் நிறுவனம் காரைநகரிலும், குருநகரிலும் வலையுற்பத்தி மற்றும் கண்ணாடிநார் இழைப்படகு உற்பத்திகளை மேற்கொண்டது. இதனால் மலிவுவிலையில் தொழிலாளர்கள் மேற்கூறிய உபகரணங்களை பெறமுடிந்தமை. (இந்நிறுவனம் பிற்காலத்தில் அரசமயப்படுத்தப்பட்டு, அதன் தொழில்நுட்பம் தெற்கில் படகுகள் தயார் செய்ய உபயோகிக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்திலும் காரைநகர் தொழில்நுட்பவியலாளர்களும் தொழிலாளர்களும் தென் இலங்கையர்க்கு தொழில்நுட்பத்தை பழக்கினர். தென்பகுதியில், குறிப்பாக யா-எல பகுதியில் உருவாக்கப்பட்ட கண்ணாடிநார் இழைப்படகுகளை தமிழ் இயக்கங்கள் பயன்படுத்தின. அப்படகுகள் காரைநகர் படகுகளை விட ஆழ்கடல் அலை அடிப்பை தாங்கக் கூடியவை. காரைநகர் படகு உற்பத்தி புளட் இயக்கக் கொள்ளையினால் நிறுத்தப்பட்டது. குருநகர் வலை உற்பத்தி நிறுவனம் புளட் இயக்கத்தாலும், புலிகளாலும் கொள்ளையிடப்பட்டதால் நிறுத்தப்பட்டு, வலையுற்பத்தி கொழும்புக்கு மாற்றப்பட்டது.
4. மீனின் பிறப்பும் வளர்ச்சியும் கடலடித்தளமேடை என்று சொல்லப்படும் Continental shelf, ஆழ்கடலுக்கும் பரவைகடல் /களம் / களப்பு கடலுக்கும் இடையிலான பகுதிலேயே நடைபெறுகிறது. இலங்கையின் பெரும்பகுதி கடலடித்தளமேடை மன்னாருக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதன் நீளம் 480 கிலோ மீற்றராகவும் அகலம் 22 கிலோ மீற்றர் இல் இருந்து 60 கிலோ மீற்றர் வரை உள்ளது. ஆகவே இப்பகுதி உள்ளக அளவில் ஒப்பிடக்கூடிய மீன் உற்பத்தியாகும் பிரதேசமாகவுள்ளது. (இந்தியாவின் இரண்டாவது பெரிய கடலடித்தளமேடை கேரளா கரையோரம் உள்ளது. அதனால் தான் கேரளம் மிக முக்கிய மீன்பிடி பிரதேசமாகவுள்ளது.) இவ்வாறு இயற்கையாகவே மீன் உற்பத்தியாகும் பிரதேசத்தின் அருகில் வடபகுதி மீனவர்கள் சீவிப்பதால், அவர்களால் அதை அனுபவிக்க முடிந்தது.
5. வடபகுதியில் பிடிபடும் மீன் தென்பகுதியில் மிகவாக விரும்பப்படுகிறது. இதனால் அங்கு நல்ல விலையுடன் சந்தை வாய்ப்பும் கிடைத்தது அத்துடன் பதனிடப்பட்ட வடபகுதி மீனுக்கும் சந்தை வாய்ப்பும் வரவேற்பும் இருந்ததால், வடபகுதியில் பிடிக்கப்பட்ட மீன்கள் அனைத்தும் வீணாகாமல் பணமாக்கப்பட்டது.
இவ்வாறு மீன்பிடி அபிவிருத்தி வடபகுதி மீனவர்களின் வாழ்நிலையை உயர்த்தியது. 1983 இல் வடபகுதியின் அதிஉச்ச மீன்பிடி காரணமாக நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத் தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்த சாதனையை செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை

வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோர தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்கலாலேயே பிடிக்கப்பட்டது. ரோலர் பயன்பாடு இலங்கையில் 80 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது பின்வந்த காலத்தில் தடைசெய்யப்பட்டதுடன், யுத்தத்தால் வடபகுதி றோலர்கள் ஆழ்கடல் செல்வது தடுக்கப்பட்டது. ஆனாலும் வடபகுதியில் இருந்த றோலர்களின் தொகை நூறுக்கும் குறைவானதே.
வடபகுதின் ஆழ்கடல் மீன்பிடி தொழில்நுட்பம், ஆரம்பத்தில் கூறியது போல வலைபடுத்தலேயாகும். இவ் வலைகளின் கண் கடலின் ஆழத்திற்கேற்பவும், எவ்வகையான மீன்களை மீனவர்கள் குறிவைக்கின்றனர், எந்தவகை காலநிலை நிலவுகிறது போன்ற காரணிகளின் அடிப்படையிலும் வேறுபடும். உள்ளக யந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் யப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5 இஞ்சி கண் விட்டத்திலிருந்து 8 இஞ்சி கண்விட்டமுள்ள, 7 இலிருந்து 10 மீட்டர் அகலமும் 1 இலிருந்து 2 கிலோமீட்டர் நீளமுள்ள வலைகளை உபயோகித்தனர். கண்ணாடி இழைப்படகுகளில் தொழில் செய்தோர் 3 இன்ச் கண்விட்டத்திலிருந்து  5 இன்ச் கண்விட்டமுள்ள அறக்கொட்டியான் வலை, திருக்கை வலை போன்றவற்றை பயன்படுத்தினார்கள். ஆனால் மரவள்ளம் உள்ளவர்கள் களங்கண்டி, சிறுவலை, கொட்டுவலை, விடுவலை, பறிக்கூடு, சூள், தூண்டில்வலைக் கயிறு, முரல் தூண்டி, சிங்க இறால் பிடித்தல் போன்ற களக்கடல் அல்லது பரவைக்கடல் சார் தொழிலை மேற்கொண்டனர். இதை விட மன்னார் பிரதேசத்தின் சில பகுதிகளில் கரைவலை இழுப்பும் தொழிலாக செய்யப்பட்டது.
இவ்வாறு ஓப்பீட்டளவில் இலங்கையிலே தெற்கை விட பல முறைகளில் வளர்ச்சியடைந்திருந்த வடக்கின் மீன்பிடி, 83 ஆம் வருடத்தின் பின்வந்த யுத்தக்காலத்தில் முற்றாக அழிக்கப்பட்டது. குறிப்பாக யாழ் மாவட்டத்தின் மீன்பிடி உபகரணங்களும், மீன்பிடி முறைமைகளும், உள்கட்டுமானமும் சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில், புலிகள் மக்களை யாழிலிருந்து வன்னிக்கு அனுப்பியபோது முற்றாக அழிக்கப்பட்டது. மன்னாரின் நிலையும் அதேபோன்று பழுதுபாற்பதற்கான வசதியின்மை, அரசபடைகளின் அட்டூழியம் போன்றவற்றால் அழிவுகண்டது.
இன்று வடக்கின் மீன்பிடித் திறனானது வெளியிணைப்பு இயந்திரம் கொண்ட 2200 கண்ணாடி இழையப் படகுகளையும், 1800 மரவள்ளங்களையும், 120 உள்ளிணைப்பு இயந்திரம் கொண்ட மீன்பிடிக்கலங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் மன்னாரிலும், குருநகரிலும் மொத்தமாக 23 குறைந்த இழுதிறன் கொண்ட இறால் பிடிக்கவெனப் பாவிக்கும் றோலர்கள் சட்டத்திற்கு முரணாக இயங்குவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.
தமிழ்நாட்டின் மீன்பிடி சிறு வரலாற்று பார்வையும் சில தரவுகளும்
தமிழ்நாட்டின் மீன்பிடி உள்நாட்டு உணவுக்காகவே பயன்தரும் வளமாக பல காலமாக இருந்து வந்தது. ஆனால் 1972 இல் மத்திய அரசால் முன்வைக்கப்பட்ட மீன்பிடி அபிவிருத்தித்திட்டத்தின்படி சர்வதேசதரத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் கேரளத்தில் நோர்வே சர்வதேச அரச அபிவிருத்தி நிதியுடன் அறுபதுகளின் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திர இழுவைப்படகுகள் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. வள்ளம், கட்டுமரம் மூலம் சிறுவலைகளை பயன்படுத்தி தொழில் செய்ததற்கு பதிலாக இந்தவகையான பொறிமுறையை பாவிப்பதனால், உற்பத்தித்திறன் கூடுவதால் மீனவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும் என இந்திய அரசினால் நம்பப்பட்டது. 1972 ஆம் ஆண்டளவில் 200 ஆகவிருந்த இயந்திரப் படகுகளின் தொகை 2008 இல் 5595 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டின் மீன்பிடி உற்பத்தித்திறன் இன்று கேரளா, குஜராத்திற்கு அடுத்ததாக இந்தியா அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 2008 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் மீன் உற்பத்தி 3,93,266.30 தொன்களாகும். இதில் 72644 தொன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 18.3 பில்லியன் (அல்லது 18131.4 மில்லியன்)இந்திய ரூபாய்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளது. இது சர்வதேச நாடுகளுக்கான ஏற்றுமதியால் பெறப்பட்ட வருமானம் மட்டுமே. உள்நாட்டு சந்தைப்படுத்தலால் பெறப்படும் வருமானம் இதைவிட அதிகமானது. இதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டின் மீன்பிடியானது செல்வம் கொழிக்கும் தொழிலாக இருக்கிறது.
ஆனால் மீன்பிடியால் பெறப்படும் செல்வம் எதுவும் யாருக்குப் போய் சேரவேண்டுமென 1972 ஆம் ஆண்டின் அரசதிட்டத்தில் கூறப்பட்டதோ அவர்களுக்கு அது சென்றடையவில்லை. காரணம் மீன்பிடி மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்பட்டபோது அரச நலன்களை பாவித்து அதில் முதலீடு செய்தவர்கள் இந்திய அரசியற் கட்சிகளில் செல்வாக்குப் பெற்ற பெரும்பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், மீன்பிடிக்கே சம்பந்தமில்லாத வேற்றுச் சமூகத்தை சேர்ந்த கோடீஸ்வரர்களுமேயாகும். அரச மீன்பிடித்திட்டம் 1972 இல் நடைமுறைக்கு வந்தபோது பரம்பரை பரம்பரையாக மீன்பிடித்தோருக்கு அதில் முதலீடு செய்வதற்கான வளங்கள் இல்லாதிருந்ததும், அரச யந்திரத்தின் லஞ்ச லாவண்யக் கொடுமையும், அடித்தட்டு மீனவர்கள் மீன்பிடி அபிவிருத்தியின் நலனை அனுபவிக்க தடையானதெனலாம்.
மேலும் நோர்வே அரசினால் ரோலர் இழுவைப்படகுகள் கேரள மாநிலத்தில் அறிமுகப்படுத்திய போதும் இதேநிலை தான் அங்கும் நடந்தது. அங்கு பாரம்பரிய மீனவர்கள் வாழ்க்கை பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டு, அவர்கள் நாளாந்த கூலிகளாக்கப்பட்டார்கள். மீன்பிடியை தளமாகக் கொண்டு பெரும் பணக்காரர் தமது மூலதனத்தை உயர்த்திக் கொண்டார்கள். இதற்கு துணைபோன நோர்வே அரசு, தமது கேரள அபிவிருத்தி செயற்திட்டத்தை ஆய்வுசெய்து, அது பல ஏழைகளை உருவாக்கியதுடன், இயற்கைவள அழிவுக்கும் வழிவகுத்ததென ஐக்கியநாடு சபையின் உலக அபிவிருத்தி சம்பந்தமான கூட்ட தொடரின் போது சுயவிமர்சனம் செய்துகொண்டது. இன்றுவரை கேரளாவில் நோர்வேயின் மீன்பிடி அபிவிருத்தி எவ்வாறு ஒருநாட்டில் அபிவிருத்தித்திட்டம் மேற்கொள்ளக்கூடாதென்பதற்கு உதாரணமாகவுள்ளது.
ஆனால் இதை ஒன்றும் கணக்கில் எடுக்காது இந்திய மத்திய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் கேரளாவில், சமூகப் பாதிப்பையும், இயற்கைவள அழிவையும் ஏற்படுத்தி ஒருசில பணமுதலைகளை மேலும் பொருளாதாரத்தில் உயர்த்திய மீன்பிடி அபிவிருத்தித் திட்டத்தை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தியதின் விளைவு, பஞ்சத்திலும் அடுத்தவர்க்கு அடிபணியாது, கடலை நம்பியே வாழ்ந்த பெருமைமிகு பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டு மீனவச் சமூகம் பெருமுதலாளிகளின் இயந்திரபடகுகளில் நாட்கூலிகளாக்கப்பட்டனர்.
மேற்கண்ட தகவல்கள் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீன்பிடி சார்ந்ததாகும். இன்று இலங்கை கடல்வலயத்தில் அத்துமீறல் செய்து நம் தேசத்தின் கடல்வளத்தை சூறையாடி, இயற்கை அழிவிற்கு வழிவகுக்கும் இந்தியக் கரையோர பிரதேசங்கள் பற்றி பார்ப்போமாகில் மன்னார் வளைகுடாவுக்கு வடக்கிலும் வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட புவியடி தளமேடையில் நாகப்பட்டினம் வடக்கிலிருந்து ராமேஸ்வரம் தெற்கு வரையாக கிட்டத்தட்ட 480 கீலோமீற்றர் கரையோர பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கரையோர பிரதேசத்தில் கிட்டத்தட்ட 43 சதவீதமாகும்.
அத்துடன் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசின் கணக்கெடுப்பின்படி நாகப்பட்டினத்தில் 1465 றோலர்களும், தஞ்சாவூரில் 469 ரோலர்களும், புதுக்கோட்டையில் 866  றோலர்களும், இராமநாதபுரத்தை சேர்ந்த 1865 றோலர்களில் 980 றோலர்களும் (மீதமானவை மன்னார் வளைகுடாவில் தொழில் செய்கின்றனர்), அதவாது மொத்தமாக 3780 இந்திய றோலர்கள் பாக்குநீரிணைப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. இத்தகவல் 2002 ஆம் ஆண்டை சேர்ந்தது. இன்றுவரை இந்தத் தொகை அதிகரித்தே வந்துள்ளது. ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல இவற்றில் பெரும்பாலானவை கோடீஸ்வர முதலாளிகளுக்கும், பாரிய மீன் ஏற்றுமதி கொம்பனிகளுக்கும் சொந்தமானதாகும்.
இதைவிட இப்பிரதேசத்தில் இலங்கையின் வடபிரதேசத்தைப் போல கரைசார் மீன்பிடியில் ஈடுபடும் 12500 மரவள்ளங்களும், 19500 கட்டுமரங்களும் கடற்றொழிலில் ஈடுபடுத்தப்படுகிறது. இவர்களும் பெரும்பாலும் சிறு வலைகளை பாவித்து மீன்பிடிக்கின்றனர்.
மீன்பிடித்திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும்

கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித்திறனை அதிகரிக்க முதலீடுசெய்வதும், அதைக் கட்டுப்படுத்தி மீன்வளத்திற்கேற்ப முதலீடு செய்ய வகைசெய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாக கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே.
உற்பத்தி உபகரணங்களில் முதலீடு செய்யும்போது, அதை இலாபத்துடன் திருப்பிப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை முதலீட்டாளருக்குண்டு. ஆனால் மீன்பிடித்தொழில் ஒரு தொழிற்சாலையில் இயந்திரங்களையும், மனிதரின் உழைப்பையும் அடிப்படையாகக் கொண்டு மூலதனத்தை உயர்த்துவது போலல்ல. மீன்வளம் இயற்கை சார்ந்தது. ஒரு தொழிற்சாலையில் இயந்திரத்தை வைத்து உற்பத்தியை கூடவோ அல்லது குறைக்கவோ முடியும்.
சந்தை நிலவரத்திற்கேற்ப உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் மீன்வளம் அப்படி அல்ல. மீன்வளத்தின் உருவாக்கம் பல ஆண்டுகளைக் கொண்ட இயற்கைசார் உற்பத்திப் பொருள். மீன்வளத்தின் உருவாக்கம் கடலின் ஆழம், அதன் அடித்தளத் தாவரவியல், கடலின் புவிசார் அமைப்பு, கடலின் நீரோட்டம், மற்றும் கடலின் வெப்ப தட்ப நிலையில் தங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவு கடற்பரப்பில் மேற்கூறிய மீன்வளர்சிக்கான சூழலியல் காரணிகள் மீன் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு மீன்கள் தான் உருவாகும். மீன்வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகள் சில வருடங்களில் மிக மிக சாதகமானதாகவுள்ள போது அடிப்படை உற்பத்தி அளவிலிருந்து 00,2 – 00,5 சதவீதத்துக்கு கூடுதலாக உருவாகலாம். ஆனால் இந்த காரணிகளில் ஏதாவது ஒன்று பாதகமானதாக அமையும்போது மீன் வளர்ச்சியின் அளவு 10 சதவீதத்தில் இருந்து 90 சதவீத வீழ்ச்சியை அடையலாம்.
இதனடிப்படையில், இயற்கையுடன் இணைந்து அதற்கு பங்கமேற்படாது மீன்பிடித்தொழில் செய்வதானது, மீன்வளர்ச்சிக்கான மேற்கூறிய சூழலியல் காரணிகளை பாதிக்காமலும், மீன்வளத்தில் கூடியது மூன்றில் இரண்டு பங்கை மட்டும் பிடிப்பதுவாகும். அதேவேளை குறைந்தது மீன்வளத்தில் மூன்றில் ஓன்று பங்காவது இருந்தால் தான் அதன் மறுஉற்பத்திக்கு வசதியாகவிருக்கும். அத்துடன் அந்த மீன்களில் குறைந்தது 75 சதவீதம் மீன்கள் மறுஉற்பத்திக்கு தயாராகவுள்ள பெண் மீன்களாகவும் இருக்கவேண்டும். அதாவது இனப்பெருக்கத்தை செய்யக் கூடியனவாக, முட்டையிடக் கூடியனவாக இருக்க வேண்டுமென கடல்வள ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் கொள்ளை இலாபத்தில் குறி கொண்டியங்கும் போது, இருக்கின்ற மீன்வளம் அனைத்தையும் தமதாக்கி கொள்ளும் போட்டி எழும். அதற்காக மீன்களை கடலிலிருந்து பெயர்த்;தெடுக்கும் பாரிய உற்பத்தி உபகரணங்களை, அவர்கள் பெரும் முதலீட்டில் வாங்கிக் குவித்து மீன்பிடியின் அளவை அதிகரிக்கும் போட்டி அவர்களிடையே வளர்ந்து கொண்டு போகும். ஆனால் அதேவேகத்தில் மீன்வகைளின் மறுஉற்பத்தி நடைபெறுவதானது மனிதனால் கட்டுப்படுத்த முடியாத, கடற்சூழல் மற்றும் தட்ப வெட்பக் காரணிகள் பலவற்றில் தங்கியிருக்கின்றது. அதனால் மீன்களின் மறுஉற்பத்திக்கு அதி அத்தியாவசியமான சினைப்படும் திறனுடைய மீன்கள் இவ்வகை கட்டுப்பாடற்ற நாசகார மீன்பிடியால் அருகிவிடும். இதனால் மீன் வகைகளின் மறுஉற்பத்தி படுபாதாள வேகத்தில் குறையும். மீன்கள் இறுதியில் கடலில் முற்றாக அருகி மீன்வளம் இல்லாத கடல்களாக அவை மாறிவிடும்.
மெதுமெதுவாக தண்ணீர் ஊறும் கிணற்றில் இராட்சத நீரிறைக்கும் இயந்திரம் வைத்து அடியொற்ற தண்ணீரை உறுஞ்சுவதற்கு இதனை ஒப்பிட்டு நோக்கினால் மீன்களின் மறுஉற்பத்தி வேகத்திலும் கூடுதலாக வேகத்தில் அவற்றை கடலிலிருந்து இழுத்து எடுக்கும் கொள்ளை இலாபம் ஒன்றே குறி என்றியங்கும் இந்தப் பெரும் முதலைகள் மீன்வளத்தை அழித்தொழித்த பின்னர் இன்னும் வேறு நாட்டு கடல்வளங்களை கொள்ளையிட நகர்ந்து கொண்டேயிருப்பார்கள்.
இயற்கைக்கு முரணான நாசகார மீன்பிடி- ஒரு சர்வதேச உதாரணம் .
மேற்கூறியது போன்று இயற்கைசார் மீன்பிடிக்கு முரணாக நாசகார மீன்பிடியை மேற்கொண்டு கடல்வளத்தை அழித்த நாடுகள் பலவுண்டு. இரண்டாம் உலகயுத்தத்தின் பின, அழிந்துபோன பொருளாதாரத்தை கட்டவேண்டிய பாரிய தேவை ஐரோப்பிய நாடுகளுக்கு முக்கியமானதாகவிருந்தது. பொருளாதார வளர்ச்சியையே முக்கியமானதாக இந்த நாடுகள் கருதின. இயற்கைவளங்களை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபிகளாக நினைத்து பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டனர். இதன் அடிப்படையில் பாரிய முதலீடுகளை மீன்பிடியில் முதலிட்டனர். பொருளாதாரம் வளர்ந்தது. ஆனால் இப்பொருளாதார வளர்ச்சியின் பின்னணியில் பாரிய அழிவை இந்நாடுகளின் கடல்வளங்கள் கண்டன. உதாரணமாக இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின், நோர்வே, ஜப்பான் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இந்த நாடுகளில் மிகப் பாரதூரமான கடல்சார்வள அழிவை ஏற்படித்திய நாடு ஸ்பெயின் ஆகும்.
பல பில்லியன்களை முதலிட்டு தனது மீன்பிடித்திறனை அதிகரித்த ஸ்பெயின், அதற்கு வசதியில்லாத அருகில் இருந்த நாடான போர்த்துக்கல்லின் கடல் பிராந்தியத்திலும் தனது இராட்சத படகுகள் மூலமும் றோலர்கள் மூலமும் மீன்பிடித்தது. கண் மண் தெரியாத மீன்பிடி காரணமாக எண்பதுகளின் நடுப்பகுதியில் மீன்வளம் அறுபதுகளில் இருந்ததை விட 90 சதவீதத்தால் குறைந்து போயிருந்தது. பாரிய முதலீட்டுடன் உலகத்தில் இரண்டாவது பெரிய மீன்பிடித்திறனை கொண்டிருந்த ஸ்பானிய நாட்டின் மீன்பிடி முற்றாக ஸ்தம்பித்தது. வேலையில்லாத் திண்டாட்டமும், பொருளாதார வறுமையும் ஸ்பானியக் கரையோர பிரதேசங்களை வாட்டியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் நடாத்திய கடல்ஆய்வு பல்லாயிரக்கணக்கான கடல் மைல் கடலடித்தளம் முற்றுமுழுதாக அழிந்து போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வாளர்கள் அறுபதாம் ஆண்டின் நிலையை மறுபடியும் இயற்கை தானாகவே உருவாக்க குறைந்து நூறு வருடங்களாவது எடுக்குமென கணக்கிட்டனர். அத்துடன் சிலவகை கடலடித் தாவரங்களும், மீன் இனங்களும் இனி அந்தக் கடற்பரப்பில் உருவாக சந்தர்ப்பம் இல்லை என்றும் முடிவு கூறினார். வறுமையில் இருந்து கரையோரப் பிரதேசத்தை விடுவிக்கவும், தனது பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ளக சந்தை வைப்பை பெறவும், வேறும் பல முக்கிய பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ஸ்பானிய அரசு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தது. வறுமையில் இருந்து கரையோரப் பிரதேசத்தை விடுவிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையுடன் இரு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது.
முதலாவது இராஜதந்திர உறவுகளையும், கடற்படை அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்காபிரிக்க கரையோரம் மீன்பிடித்தலாகும். அத்துடன் டென்மார்க், இங்கிலாந்து போன்ற நாடுகளின் வடகடல் பிரதேசத்தில் அந்நாடுகளின் நல்லெண்ண அனுமதியுடன் குறிப்பிட்ட அளவு தொன் மீன்களைப் பிடித்தல். இரண்டாவது ஸ்பானிய கரையோரப் பிரதேசங்களில் உல்லாசப் பயணக் உள்கட்டுமானங்களை உருவாக்கி உல்லாசப்பயணிகள் மூலம் வரும் வருவாயில் வறுமையை ஒழித்தலாகும். இன்று இருபது வருடங்களில் பின் இந்த இரு திட்டங்களில் இரண்டாவது திட்டம் பல வழிகளில் வெற்றி அளித்துள்ளது. ஆனால் மேற்காபிரிக்க கரையோரம் மீன்பிடிக்கும் திட்டமானது ஸ்பானியாவின் அத்துமீறலால் பல்லாயிரம் ஆபிரிக்க மக்களை வறுமையில் தள்ளியுள்ளது. அவர்களின் கடல்வளம் பாரிய ரோலர்களின் மூலம் களவாடப்படுகிறது. ஐக்கியநாடுகள் சபையில் இதைப்பற்றிய விவாதம் வந்தபோதெல்லாம் தமது அதிகாரத்தைப் பாவித்து ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பானியாவின் அத்துமீறலையும், மேற்காபிரிக்க கடல்வளங்களின் மீதான காட்டுமிராண்டித்தனமான வன்முறையையும் நியாயப்படுத்தியது. இன்றும் தொடர்ந்து அதையே செய்கின்றது. அது மட்டுமல்லாமல் செனகல் போன்ற நாடுகளில் ஸ்பானிய காட்டுமிராண்டித்தனத்திற்கெதிராக போராட வெளிக்கிட்ட உள்நாட்டு மீனவர்களையும். அவர்களில் அரசியல் வழிகாட்டிகளையும், இலஞ்சம் வாங்கும் உள்நாட்டு அரசியல் கைக்கூலிகளின் உதவியுடன் கொலைசெய்தது ஸ்பானிய அரசு. அதேவேளை ஸ்பானியா கொள்ளையடிக்கும் ஆபிரிக்க கரையோரநாடுகளில் ஐரோப்பிய ஒன்றியம் தனது அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் கடல்வள அழிவுக்கு எதிரான மக்கள் போராட்ட உத்வேகத்தை தடுத்து நிறுத்திய வண்ணமுள்ளது. எப்படித்தான் இருந்தாலும், எந்தவகை கடற்கொள்ளையின் ஈடுபட்டாலும், ஒருகாலத்தில் உலக அளவில் மீன்பிடியில் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இருந்த ஸ்பானியா இன்றுவரை அந்த இடத்தை திரும்பவும் பிடிக்கமுடியவில்லை. இன்று அயல் நாடுகளினதும், வேறு வளைய நாடுகளினதும் கடல்வளங்களை கொள்ளையடிக்க புறப்படிருக்கும் புதிய கடற்கொள்ளைக்காரர்களான சீனர்களும் இந்தியர்களும் 2003 ஆம் ஆண்டிலிருந்து, உலக அளவில் மீன்பிடியில் முதன்மை வகிக்கும் முதல் பத்துநாடுகளில் முறையே முதலாம் இடத்திலும் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றார்கள்.
ஆம் இன்று எம்தேசம் மேற்கு ஆபிரிக்க கடல்வளம் ஸ்பெயின் நாட்டின் கடற்கொள்ளைக்கு ஆளாகும் நிலைபோல தெற்கில் சீன அரக்கர்கள் கொள்ளையை ஆரம்பித்துள்ளனர். வடக்கில் இந்தியக் கொள்ளையர்கள் எமது கடல்வளங்களை பலவருடங்களாக கொள்ளயிடுகின்றனர்.
இந்திய அத்துமீறல்களும், இயற்கைவள அழிவும் இலங்கை தமிழ் மீனவரின் வாழ்நிலையும்
இலங்கையின் வடபிரதேசக் கடலில் இந்திய நாசகார மீன்பிடி எவ்வகை அழிவை ஏற்படுத்துகிறதென பார்க்கமுன், பாதிக்கப்படும் பிரதேசங்களின் கடல்வளத்தை பற்றியும், அவற்றின் தன்மை பற்றியும் அறிந்து கொள்வது, அழிவு எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது, மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.
வடபகுதியின் கடல் பகுதியில் மீன்வள உருவாக்கதிற்கான இருவகை சூழல்கள் காணப்படுகின்றது.
1.கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம்.
2. ஐந்து பாகத்திற்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம். (இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல்வலைய எல்லை வரையான பிரதேசம்)
1. கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட பிரதேசம்.
இப்பிரதேசம் கடற்கரையில் இருந்து இரண்டு கடல் மைலுக்கு உட்பட்ட, மூன்றிலிருந்து ஐந்து பாகம் ஆழம் கொண்டதாகும். இதன் அடித்தளம் பெரும்பான்மையாக முருகைக்கல்லும்,  மணலும், சேறும் கலந்ததாகவிருக்கும்.
இப்பிரதேசத்தைக் கடலடித்தளத்தின் தன்மை, தாவரவியல், போன்றவற்றின் அடிப்படையில் இரண்டாக பிரிக்கலாம்.
1. கரையிலிருந்து ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட பிரதேசம்
2. ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம்.
1.1. ஒரு பாகம் ஆழத்தைக் கொண்ட சேற்று மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட பிரதேசம்
இக்கடற்பரப்பை களக்கடல், களப்புக் கடல் என்றும் சில பிரதேசங்களில் பரவைக்கடல் என்றும் அழைப்பர். அநேகமான இடங்களில் இக்கடலின் கரைப்பகுதி ஆரம்பகாலத்தில் கடலாகவிருந்து, பின்பு மறுபடியும் இயற்கையின் மாற்றத்திற்கேற்ப மறுபடியும் கடலாக மாறிய இடங்களாகும். காலகாலமாக நடந்த இந்த மாற்றங்கள் இப்பரவைக் கடலின் மீன்வளர்ச்சிக்கான சூழலியல் காரணிகளில் முக்கியமானதாகும். தரையாகவிருக்கும் நிலம் கடலாக மாறும் போது கடலின் பௌதிகவியலில் மாற்றமேற்படுகிறது.
இந்த மாற்றங்களுக்கு கடலடித்தள தாவரவியலில் பாரிய செல்வாக்கு செலுத்துகிறது. கடலடித்தள தாவரவியலின் மாற்றமும், அதன் வளர்ச்சியுமே எந்தவகையான உயிரினங்கள் அக்கடல் பகுதியில் உருவாகின்றது என்பதை தீர்மானிக்கின்றது. இக்கடல் பகுதி சேறும் மணலும் கலந்த ஒரு பாக ஆழத்திற்கு உட்பட்டதாக இருக்குமானால் கடல் அறுகு, சாதாளை போன்ற தாவரங்களை கொண்டதாகவிருக்கும். சல்லி, திரளி, கிழக்கன், சுண்ணாம்புக்கெளுத்தி, மணலை, திருவன், கயல் போன்ற மீன்வகைகளும், வெள்ளைறால், மட்டறால், வெள்ளைநண்டு, குழுவாய்நண்டு போன்ற நண்டு இனங்களும், ஆடாதிருக்கை, புலியன் திருக்கை இன திருக்கைகளும், இங்கு உருவாகி ஆழ்கடல் சென்று பருவகாலத்தில் இனபெருக்கத்திற்கு தான் பிறந்த இடத்தை தேடிவரும். சிறையா போன்ற மீன்கள் இக்களக்கடலில் உற்பத்தியாகின்றன. இந்தவகை கடல் பகுதி புங்குடுதீவு பெரியபிட்டியில் இருந்து, பருத்தியடைப்பு ஊருண்டி ஊடாக தோப்புகாட்டு முனங்குக்கும் தம்பாட்டி கிழக்கு முனயூடாக, அராலி, நாவாந்துறை, பண்ணை பாசையூர் ஈறாக கொழும்புத்துறை வரையும் தொடர்கிறது.
1.2. ஒன்றிலிருந்து ஐந்து பாகம் வரை ஆழம் கொண்ட முருகை மற்றும் மணல் அடித்தளத்தைக் கொண்ட கடற்பிரதேசம்.
இக்கள கடலுக்கு ஒரு பாகத்திற்கும் ஐந்து பாகத்திற்கும் இடையில் ஆழம் இருந்தால் அதன் கடலடி நிலம் மணலாலும், சிறு முருகை கற்தளத்தையும் கொண்டதாக இருந்து வருகிறது. இப்பகுதியின் கடலடித் தாவரங்களாக பெரும்பாலும் சாட்டாமாறு காடுகளும், கடற்தாளைப் பற்றைகளையும், பல்லின பாசிகளையும் கூறலாம். இப்பகுதியில் விளை, ஓரா, ஒட்டி, கலைவாய், கிளி, சுங்கன்கெளுறு, செம்பல்லி, மதணன், செங்கண்ணி, பூச்சை, கறுவா, மசறி, கீளி, போன்ற மீன் வகைகளும் சிங்கறால் என்ற நண்டு இனமும், கட்டித்திருக்கை, கருவால்திருக்கையும் இக்கடல் பிரதேசத்தில் உருவாகிறது. அத்துடன் இக்கடல் பிரதேசத்தில் கணவாய், சிறையா போன்ற கூட்டமாக வாழும் மீனினத்தின் வாழ்விடமாகவும் இது உள்ளது. கணவாய் இப்பகுதியில் சாட்டமாறு, மற்றும் கடல் தாளையின் தண்டுகளில் இடும் முட்டைகள் நீரோட்டத்தின் உதவியுடன் மேற்கூறிய ஒரு பாக ஆழத்திற்கும் குறைந்த கள கடலின் கரை பகுதியை அடைகின்றன. அங்கிருக்கும் வெதுவெதுப்பான நீரினால் முட்டைகள் கணவாய் குஞ்சுகளாக பொரிக்கின்றன. குஞ்சுகள் பிற்பாடு நீரோட்டத்தின் உதவியுடன் வந்தவிடத்தை சென்றடைகின்றன. இக் கணவாய்கள் ஒன்றிலிருந்து இரண்டு பாக ஆழத்தில் களம் கண்டி பெரும் கூட்டம் வைத்திருக்கும் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது.
ஆனால் சிறையா மீன்கள் கரைசார் பகுதியில் முட்டையிடுகின்றன. அம் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவரும். அக் குஞ்சுகளை மணலை என அழைப்பர். சில மாதங்களின் பின் மணலைகள் வளர்ந்து நடுநிலை அடைகின்றபோது அவை களக்கடலில் இருந்து வெளியேறி, தாய் மீன்கள் இருக்கும் ஆழமான ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பகுதிக்கு புலம்பெயர்ந்து விடும். இந்நிலையில் அதை காடன் என்று அழைக்கப்படும். இக் காடன்கள் சினைக்கும் பருவம் அடையும் போது கிட்டத்தட்ட முழுவளர்ச்சியையும் அடைந்து விடும். அப்போது அதை சிறையா என அழைப்பார்கள். சினைத்து இனப்பெருக்க காலத்தில் அவை மறுபடியும் தாம் பிறந்த களக் கடலுக்கு முட்டையிட சிறையாக்கள், கூட்டம் கூட்டமாக வரும். இவைகளை விடுவலையை உபயோகித்து தொழிலாளர்கள் பிடிப்பது வழக்கம். இந்தவகை ஒரு பாக ஆழத்திற்கும் ஐந்து பாக ஆழத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதி மன்னார் விடத்தல்தீவு, இலுப்பைக் கடவை, வெள்ளாம்குளம், நாச்சிக்குடா ஊடாக கவுதாரிமுனை வரைக்கும். பின்பு மண்டைதீவு கரை தொடக்கம் வேலணை, செட்டிபுலம், புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, போன்ற தீவுகளின் பின்பக்கமாக தொடர்ந்து, காரைதீவு கற்கோவளம் ஊடாக பருத்தித்துறை முனை வரையும் தொடர்கிறது.
2. ஐந்து பாகத்திற்கு மேற்பட்ட ஆழம் கொண்ட கடற்பிரதேசம்.( இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல்வலைய எல்லை வரையான பிரதேசம்.)
இது தலைமன்னாரிலிருந்து கச்சதீவை உள்ளடக்கிய பாக்குநீரிணையின் நெடுந்தீவு வாய்க்கால், மேற்கு வாய்க்கால், காங்கேசன்துறைக்கு அடுத்துள்ள ஏழாம் வாய்க்கால் ஈறாக பருத்தித்துறையை அடுத்துள்ள கிழக்கு வாய்க்கால் வரை தொடர்கிறது. இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயதிற்குள் அடங்கும் இந்தப் பிரதேசத்தின் அகலம் 14 இக்கும் – 23 நோர்டிகல் மைலுக்கும் இடைப்பட்டதாகவுள்ளது. இந்தப் பிரதேசத்தின் ஆழம் பற்றி சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் 1979 – 1980 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசின் ஏற்பாட்டில் கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலான பிரித்ஜோப் நான்சென் செய்த ஆவின்படி இப்பகுதியின் ஐந்திலிருந்து இருபது பாகத்திற்கு இடைப்பட்ட ஆழப் பிரதேசமாகும். இப்பகுதி மீன்வளம் கொழிக்கும் பிரதேசம் எனக் கணிக்கப்பட்டது. இதே ஆய்வின்படி இப்பகுதியின் கடலடித்தளம் பாரிய கடலடித்தள ஊழசநட சநநக எனப்படும் முருகைகளை (பவளப்பாறைகளை)க் கொண்டுள்ளது. அதனால் பவளப்பாறைகளை தன்னகத்தே கொண்ட கடலடிப் பிரதேசத்திற்கே உரித்தான தாவரவியலைக் கொண்டுள்ளது. பவளப்பாறைகளை உள்ளடக்கிய பிரதேசத்தின் தாவரவியலானது, மேற்கூறிய கற்கடல் பிரதேசத்தில் இருப்பதிலிருந்து வேறுபடுவதில்லை. இதன் அடிப்படையில் இதன் தாவரங்களாக சாட்டமாறு, பல்லின பாசிவகை, கடற்தாளை போன்றவற்றை குறிப்பிடலாம்.
இக்கடல் பிரதேசத்தில் பாரை, கட்டா, சீலா, சூடை, வளை, மண்டைக் கெளுறு, சூபாரை, கும்பிளா, பருந்தி போன்ற இருபதிற்கும் மேலான மீன்வகைகளும் வெள்ளைறால், சாக்குக்கணவாய், கல்லுத்திருக்கை போன்றனவும் பெருமளவில் உற்பத்தியாகிறது.
இந்திய கடலாதிக்கத்தால் எம் கடல்வளங்கள் அழிக்கப்படும் விதமும் அதன் தாக்கமும்.
 

இழுவைப் படகுகளின் பாதிப்புகள்
இழுவைப்படகு மீன்பிடி என்பது படத்தில் காண்பது போன்று இயந்திரப்படகின் கடையால் பகுதியில் பாரிய பை போன்ற வலையை இணைத்து இயந்திர உதவியுடன் கடல் அடித்தளத்தை வடிகட்டுவதாகும். இந்த வகை மீன்பிடி முறையானது பின்வரும் கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுதுகிறது.
அவையாவன :
1. மீனின் வகை, தொகை, நிறை, அளவு போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் மீன்பிடித்தல்
2. கடலடித்தள தாவரங்களை அழிப்பதன் மூலம் தாவரவியலில் மாற்றமேற்படுத்துவது
3. கடலடித்தள பவளப்பாறைகள் – முருகைகளை அழித்தல்
4 மீன் இனத்தின் முட்டைகளையும் குஞ்சுகளையும் அழிப்பதன் மூலம் மீன் உற்பத்தியை தடைப்படுத்துதல்
5. இயற்கையின் சமநிலையைக் காக்கும் கடலடித்தள சிறு நுண்ணுயிர்களையும் உணவுக்கு உதவாத மீன்வகைகளையும் அழிப்பதன் மூலம் இயற்கை அழிவை ஏற்படுத்தல்.
6. பலமணி நேரம் தொடர்ச்சியாக இழுவைப்படகு இயங்குவதன் மூலம் பல நூறு லீட்டர் எரிபொருள் மூலம் சூழல் மாசடைதல்.
இதில் முதல் நான்குவகை பாதிப்புகளும் உடனடியாகவும் நேரடியாகவும் கரையோர மற்றும், இழுவைப்படகில் அல்லாமல் வலைப்படுப்பு மூலம் ஆழ்கடலில் தொழில் செய்வோரை பாதிக்கின்றது. கடைசி இரு பாதிப்புகளும் நீண்டகால போக்கில் மீனவர்களையும், இயற்கையையும், இதன் அடிப்படையில் மனித குலத்தையே பாதிக்கும்.
இழுவைப்படகு மூலம் மீன்பிடித்தல், இன்றுள்ள வேற்றுத் தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் அதீத பிடிதிறன் கொண்ட தொழில் நுட்பம். எண்பதுகளின் ஆரம்பத்தில் இழுவைப்படகு மீன்பிடியின் பாதிக்கும் தன்மையைக் கடலாய்வு மூலம் கண்டறியப்பட்டு, மீன்பிடி ஆராய்ச்சி மையங்கள் இதற்கு நிகராக பலவருடங்களாக முயன்றும் இன்றுவரை மாற்று தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோன்று இந்தத் தொழில் நுட்பத்தின் பாதிக்கும் தன்மைகளை விலக்கி நவீனமயப்படுத்தும் முயற்சியும் இன்றுவரை தோல்வியிலேயே முடிந்துள்ளது. காரணம் கடலில் இயற்கையான பௌதீக தன்மைக்கு முரணாக தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாமையேயாகும்.
இந்த இழுவைப்படகு தொழில்நுட்பத்தை கவனித்தால், ஏன் இதன் பாதிப்பைக் குறைத்து நவீனமயப்படுத்த முடியாதென்பதை விளங்கிக் கொள்ளலாம். இழுவைப் படகின் கடையாலில் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் வலையானது இரு பகுதிகளைக் கொண்டது. அதன் அகண்ட முதற்பகுதியை மடி என அழைக்கப்படும். அதன் ஒடுங்கிய அடிப்பக்கம் தூர் எனப்படும். மடியின் வாயின் கீழ்ப்பகுதியில் ஈயம் அல்லது இரும்பினாலான உருளைகளும், அதன் மேற்பகுதியில் மிதவைகளும் பிணைக்கப்பட்டிருக்கும். மடியின் வாயை அகட்டில் வைத்திருப்பதற்காகவும், மடியை இழுக்கும் போது ஒலி எழுப்பியும், நிலத்தில் உள்ள அடித்தள மீன்களை விரட்டி மடி வாயில் அனுப்புவதற்காகவும், மடியானது படகு இழுக்கும் போது நிலமட்டத்திலிருந்து மேல் கிளம்பாமல் இருப்பதற்காகவும் மடியின் வாயின் இரு பகுதிலும் பல நூறு கிலோ எடை கொண்ட இரும்பினாலான கதவுகள் இணைக்கப்பட்டிருக்கும்.
கடலடித்தளதிலுள்ள தாவரங்களையும், முருகைகளையும் அழித்தொழிக்கும் இழுவைமடியுடன் இணைக்கப்படும் இரும்புச்சங்கிலிகளும், இருபக்க இரும்புக் கதவுகளும், மடியின் அடியில் பிணைக்கப்படும் உலோக உருளைகளும் இல்லாமல் இழுவை தொழில் நுட்பத்தை உருவாக்க முடியாது. குறிப்பாக கடல் அடித்தளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் மடியில் இருபக்கமும் இணைக்கப்படும் இரும்புக் கதவுகள் இல்லாமல் பாவிக்கக்கூடிய இழுவைமடியை உருவாக்க முடியாது . கடலில் பவுதீகவியலுக்கேற்ப மடியை கடலடித்தளத்திற்கு கொண்டு செல்லவும், படகு இழுக்கும் போது அதை ஒரேநிலையில் வைத்திருக்கவும் பாரமான ஏதாவது ஒரு பொருள் மடியுடன் இணைக்கப்பட்டே ஆகவேண்டும். இல்லையேல் மடி கடல் மேற்தளத்தில் மிதந்தபடி இருக்கும். மீன்பிடிக்க முடியாது. இவ்வாறு இந்த தொழில் நுட்பம் ஏற்படுத்தும் பாதிப்பை நிவர்த்தி செய்ய முடியாமையினாலேயே, இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த மேற்கைரோப்பிய நாடுகள் இழுவைப்படகு பாவனையை தமது கடல் வலயத்தில் தடைசெய்துள்ளனர் அல்லது பாவனையை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளனர்.

படம் 1 . இழுவைப்படகு மீன்பிடிக்கு முன்  உள்ள கடலடித்தளம்
இதனடிப்படையில் மேற்கூறியபடி கடலடித்தளத்தின் சீவராசிகளையும், தாவரங்களையும், நில அடித்தள பவளப்பாறைகளையும் அழிக்கும் தொழில் நுட்பத்தை பாவித்து இந்திய இழுவைப் படகுகள் நம் தேசத்தின் வடகடலில் ஒரு பாக ஆழத்திற்குட்பட்ட களக்கடல் தவிர்ந்த அனைத்து கடல் பிரதேசத்திலும் மீன்பிடிக்கின்றனர். இதனால் களக்கடலில் களங்கண்டி, மற்றும் விடுவலை இழுக்கும் தொழிலாளர்களிலிருந்து, கண்ணாடியிழைப் படகுகளில் அறக்கொட்டியான் வலைத்தொழில் செய்பவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

படம் 2 . அதே இடத்தில இழுவைப்படகு மீன்பிடித்த அரை மணி நேரத்தின் பின்  எடுக்கப்பட்டபடம்
உதாரணம் 1
இந்திய இழுவைப்படகுகள் எழுவைதீவுக்கும், காரைதீவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் மீன்பிடிப்பதனால், ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு, மெலிஞ்சிமுனை, கெட்டில் போன்ற பிரதேசங்களில் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை மாதம் வரை களங்கண்டி மூலம் கணவாய் பிடிக்கும் தொழில் கடந்த ஆறுவருடங்களாக பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. மேற்கூறிய கிராமங்களில் 2003 ம் வருட கணக்கெடுப்பின்படி மொத்தமாக நூற்றி இருபது கடல்தொழிலாளர்கள் களங்கண்டியை தொழிலாகக் கொண்டிருந்தனர். இவர்கள் கார்த்திகை மாதத்திலிருந்து சித்திரை 2003 வரையான காலத்தில் மாதாந்தம் ஒவ்வொருவரும்; சராசரி 45 கிலோ கணவாய்களை பிடித்துள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்த பிற்பாடு இன்று மொத்தமாக 32 தொழிலாளர்களே கணவாய் பிடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் மீன்பிடிச் சங்கங்களின் தகவலின்படி 2010 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 15 கிலோ கணவாயே மாதாந்தம் பிடித்துள்ளனர். அதுவும் இப்பிடிபாடு கணவாய் அதிகமாகப் பிடிபடும் மார்கழி மற்றும் தை மாதத்திலேயே பிடித்துள்ளனர். பெரும்பான்மையானோர், பிடிபாடு குறைந்ததால் தை மாதத்தின் பின் களங்கண்டி தொழிலை நிறுத்தி விட்டனர். இவ்வாறு கணவாய்த் தொழில் படுத்ததற்கு நேரடிக் காரணமாக தொழிலாளர்கள் இந்திய இழுவைப்படகுகளையே குற்றம் கூறுகின்றனர். எழுவைதீவுக்கும், காரைதீவுக்கும் இடைப்பட்ட கடற்பிரதேசத்தில் உள்ள கடற்தாளைகளைக் காடுகளிலும், சாட்டாமாறுப் புதர்களிலும் கணவாய்கள் முட்டையிடுகின்றன. ஐப்பசி மாதத்தில் தொடங்கும் வாடைக்காற்று காலத்தில் ஏற்படும் நீரோட்டத்தால் முட்டைகள் தீவுகளுக்கும் ஊர்காவற்றுறை தீவுக்கும் இடைப்பட்ட குடாவுக்குள் அடித்துச் செல்லப்படுகின்றன. அவை மேற்கூறிய கிராமங்களில் களப்பிரதேசத்தை அடைந்து அங்கு குஞ்சு பொரிக்கின்றன. அவை வளர்ந்து சில மாதங்களில் மீனவர்களால் பிடிக்கப்படுகிறது. ஆனால் இழுவைப்படகுகள் முட்டையிடும் கணவாய்களை வகை தொகையின்றி பிடிப்பதுடன், அவைகளின் வாழ்வாதாரமான கடற்தாளைகளையும், சாட்டாமாறுகளையும் அழிப்பதனால் கணவாய்களின் உற்பத்தி குறைகின்றது. இது அப்பகுதி மீனவர் கருத்து மட்டுமல்ல, இது செனகல் நாட்டின் கரையோரம் நடாத்தப்பட் ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாசகார மீன்பிடியால் இலங்கை வடகடல்சார் தொழிலாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் - சில உதாரணங்கள் :
உதாரணம் 2 .
ஆரம்பத்தில் குறிப்பிட்டது  போல சிறையா இன மீன்கள் கரையோரம் பிறந்து கடற்  தாளைகளைக் கொண்ட
ஒரு பாக   ஆழத்திற்கு மேற்பட்ட  பிரதேசத்தில் சீவிக்கும் . இழுவைப்படகுகள்    இதன் வாழ்விடமான கடற்தாளைகளை அழித்து அவற்றிடையே மீன் பிடிக்கின்ற போது, நீரின் மேல்தளத்தில் நீந்தக் கூடிய      தன்மை கொண்ட  சிறையாக்கள் இழுவை மடியில் இருந்து தப்பித்து விடும். ஆனால் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படும் போது     அவை வேறு பகுதிக்கு புலம் பெயரும் அல்லது கரையோரமாக  ஒதுங்கி இறந்து விடும்.   செட்டிபுலம், துறையூர், கெட்டில், நாவாந்துறை, சாவற்கட்டு
போன்ற கிராமத்து தொழிலாளர்கள்   பல பரம்பரையாக வேலணைக்கும் புங்குடு தீவுக்கும் இடப்பட்ட பகுதியில், அதாவது வேலனையும் புன்குடுதீவையும்  இணைக்கும்  பாலதிற்கு  கிழக்காக   உள்ள கடற்பரப்பில்
விடுவலை, மற்றும் சிறையாவலை பாவித்து சிறையா மீன் பிடிப்பது வழக்கம்.  இந்திய இழுவைப்படகுகள் சிறையாகளின்
வாழ்விடமாமான வேலணைக்கும்  புங்குடு தீவுக்கும் இடையிலுள்ள கடற்பரப்பில் நாசகார மீன் பிடியில் ஈடுபடுவதனால்
தற்போது விடுவலை தொழில்  முற்றாக அழிந்து விட்டது. சிறையாவலை சிலரால் பாவிகப் பட்டாலும் முன்னைய காலம் போல் பெரிய அளவில் உழைக்க   முடியாதுள்ளது என அப்பகுதி கடற்தொளிலாளர்கள் தெரிவிக்கின்றனர் .
உதாரணம் 3 .
காரைதீவு கற்கோவளம் தொடக்கம்   பருத்தித்துறை வரையான பகுதியின் கடலடித்தளம் சிங்கரால் வளர்சிகான சாதகமான தன்மை கொண்ட பகுதி. இப்பகுதியில்  சாட்டாமாறும்   முருகைகளும் அதிகமாவுள்ளது. முருகைகள்  பதுங்கி இருக்கும் பொந்துகளை கொண்டதனால்    சிங்கறால்கள் உற்பத்தியாகும் இடமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது.
அதேபோல் மன்னார் விடத்தல்தீவு, இலுப்பைக் கடவை, வெள்ளாம்குளம், நாச்சிக்குடா ஊடாக கவுதாரிமுனை வரைக்குமான கடற்பிரதேசமும் சிங்கறால் உற்பத்தியாகும் இடங்களாகும்.
சிங்கறால் ஏற்றுமதி இலங்கையில் எண்பதுகளிலேயே ஆரம்பித்தது. மீன்பிடி குறைந்த சோழகக்காற்று
வீசும் காலத்தில் தொழிலாளிகள் வள்ளங்களில் சென்று நீரில் குழிபுகுந்து கைகளாலேயே இந்த சிங்கரால்களை பிடிப்பர். ஒரு றால் பிடித்தால்    ஒருநாள் சீவியதிற்கு காணும் என்பர்கள் இப்பிரதேசத்தில் தொழில்
செய்யும் தொழிலாளிகள் இன்று சிங்கறால் இந்தியாவிலிருந்தும் சிங்கபூர், மலேசியா, ஜப்பான் போன்ற
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் பல கோடி அந்நிய     செலவாணிகளை  இந்தியர்கள்  சம்பாதிகின்றனர். ஆனால் சிங்கறால் உற்பத்தியாகும் கடல் பிரதேசம் பெருமளவில் இலங்கையின் வட பகுதியிலேயே  அமைந்துள்ளது   .
இதனாலேயே மீனை விட  பெறுமதி வாய்ந்த சிங்கறாலைக் குறிவைத்து     பல நூற்ருக்கணக்கான  இந்திய
நாசகார இழுவைப்படகுகள் மேற்கூறியபிரதேசங்களில் இழுவைமடியை  உபயோகித்து சிங்கரால்களைப்
பிடிக்கின்றனர்.  ஏற்றுமதிக்கு தகுதியான சிங்கரால்கள் உயிருடன்  பிடிக்கப்படல் வேண்டும். ஆகவே கையால் பிடிப்பது அல்லது   இழுவைமடி மூலம் பிடிப்பது போன்ற இரண்டு முறைகளே உண்டு.
வலை   மூலம் முயன்றால் கால்கள் உடைந்து அவை  இறந்து விடும்.  இலங்கையில் இழுவைப்படகு
தடைசெய்யப்பட்டுள்ளதனால்; தொழிலாளிகள் கைகளாலேயே சிங்கறால் பிடிப்பது வழக்கம்.
இது   இயற்கை சார்ந்து, கடல்வளதிற்கு பங்கமேற்படாமல்  செய்யப்படும் தொழிலாகும். எல்லை
கடந்து இந்தியர்கள் இழுவைமடி மூலம் சிங்கறால் பிடிக்கும் போது பல லட்சம் பெறுமதியான
ரால்களை பிடிக்கின்றனர். அதேவேளை தான் பிடித்திருக்கும் மரக்கொப்பை வெட்டுபவனைப்
போல கண்மூடித்தனமான
சிங்கறால் பிடி மூலம் அதன்  எதிர்கால  உற்பத்தியையும் அதற்கு ஆதரமான கடலடித்தள
தாவரவியலையும்; முருகைகளையும் அழிகின்றனர் .     இழுவை மடிமூலம் பருத்தித்துறை
முனைப் பிரதேசதில்  சிங்கறால் பிடித்த இந்திய இழுவைப்படகுகளையே அப்பகுதி
தொழிலாளிகள் சிறைப்பிடித்தனர்  என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டியதொன்று.
உதாரணம் 4 :
மேற்கண்ட
உதாரணத்தில்   கூறியது போல சிங்கறால்  பிடிப்பதற்காக    இந்திய இழுவைப்படகுகள்  இலங்கையின் வடகரையில் கரையோரத்தில் மடியிழுப்பதால் பாதிப்படைவது   சிங்கிறால் வளர்ச்சியையும், கடலடித்தள தாவரவியல்  மட்டுமல்ல, இந்தியர்களின்  மடியிளுப்பால்   பாதிக்கப்படுபவர்கள்;   ஐப்பசி மாதத்திலிருந்து சித்திரை வரையான மாரிக்கும், வசந்தத் திற்கும் இடைப்பட்ட  காலத்தில் கரையோரம் வரும் கட்டா, பாரை, சூபாரை, கருங்கண்ணிப்பாரை, காலை, அறுக்குளா, போன்ற பதினைந்து வகை   இன மீன்களை நம்பி அறக்கொட்டியான்வலை பாவித்து தொழிலில்ஈடுபடும்
கிட்டத்தட்ட 1800 மர வள்ளங்கள் மற்றும்  கண்ணாடி இழைப்படகுகள்  மூலம்
தொழில்புரியும்  6000  தொழிலாளிகளுமே .
மேற்படி  தொழிலாளர்களை இரண்டுவகையில் இழுவைப்படகுகள் நேரடியாக பாதிக்கின்றன.
முதலாவது, மேற்கூறிய மீன்கள் பருவகாலத்தில் கரைப்பகுதிக்கு   வர முன்பே ஆயிரக் கணக்கான
இந்திய இழுவைப்டகுகள்
தமது பாரிய பிடிதிறன் மூலம் மீன்களைப்பிடித்து விடுகின்றனர் . இதனால் கரையோரப்பகுதிக்கு வரும் மீன்களின் தொகையில்  பாரிய வீட்சி ஏற்படுகிறது. அதிலிருந்தும் தப்பி வரும் மீன்களையும் இவர்கள் கரையோரம் வந்து சிங்கரால்களுக்காக மடி இழுக்கும் போது   அள்ளி விடுகிறனர் .
இரண்டாவதாக ,  மீதமாக இருக்கும் மீன்களைப்  பிடிக்க தொழிலாளர்களால் படுக்கப்படும்
வலைகளையும் வெட்டி அளித்துவிடுகிறன இந்திய இழுவைப்படகுகள் .  இவ்வகையில் இலங்கை மக்களுக்கு சொந்தமான  கடல்வளங்களை களவாடுதல் மட்டுமல்லாமல்; அவர்களில்
பலலட்சங்கள் பெறுமதியான படுப்புவலைகளை வெட்டுவதன் மூலாமும் பொருளாதார நஷ்டத்தையும்,
வறுமைச் சுமையையும் இந்தியர்கள் எம் தொழிலாளிகள் மீது சுமத்துகின்றனர்.
உதாரணம் 5 .
இதே அடிப்படையில் தான் மன்னார் பகுதியில் கரைவலைத் தொழில்  செய்யும் கிட்டத்தட்ட
இரண்டாயிரம்   தொழிலாளர்கள் இந்திய இலுவைப்படகுகளால் பாதிக்கப்படுகின்றனர் . கரைவலைத்
தொழிலானது வெள்ளம் நுகைக்கும் போது கரைக்கு கூட்டமாக   வரும்  மீன்களை வலையால் வளைந்து;
பின்பு அவ்வலையை கரைக்கு இழுப்பதாகும். இந்திய இழுவைப்படகுகள்   அம்மீன்கள் கரைக்கு வருமுன்பே  கரையிலிருந்து ஒரு கடல்மைல்   தூரத்திலிருந்து பிடித்து விடுவதனால்; கரைவலைத்
தொழிலும்  அது சார்ந்து வயிற்றைக் கழுவும் தொழிலாளிகளின் குடும்பங்களும்  பாதிப்படைக்கின்றனர்.
வடபகுதியில் கரைவலைத் தொழில் செய்வோர் மிகவும்  வறிய நிலையிலுள்ள தொழிலாளர்களாகும்
என்பதை இங்கு நாம் நினைவிற் கொள்ளவது நன்று.
மீன்பிடித்தொழிலும் தமிழ்,சிங்கள தொழிலாளர்களுக்கிடையிலான றவும்   
சிறிமாவோ பண்டார நாயக்க ஆட்சி செய்த 72 -77 வரையான காலத்தில் தென்னிலங்கையில்
அரசியல்ரீதியாக  அசாதாரண நிலை நிலவியது. பெரும்பான்மையான மீன்பிடி சார்ந்த கிராமத்தவர் பலர்
ஜேவிபி யில் இணைந்திருந்தனர் . இக்காரணங்களால் நீர்கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாரிய
மீன்பிடி அபிவிருத்தி யொன்றும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை . அதனால் 77 இல் ஆட்சிக்கு வந்த
ஜெயவர்த்தன  அரசால் உலக நாணயநிதியத்தின் உதவியுடனும், மேற்கு நாடுகளின் உதவியுடனும்
இப்பகுதிதியைச் சேர்ந்த
80 % வீததிற்கு மேற்பட்ட மீன்பிடி கிராமங்கள்
உல்லாசப் பயணிகள் வந்து தங்கி செல்லும் விடுதிகளையும், கேளிக்கை அரங்குகளையும் கொண்ட
தலங்களாக மற்றப்பட்டது. இன்றும் கூட 70 % வீததிற்கும் அதிகமான உல்லாசவிடுதிகள் இப்பகுதிகளிலேயே
அமைந்துள்ளன. இந்த மாற்றமானது பாரிய கலாச்சார சீரழிவுகளையும், சமூக-பொருளாதார
மாற்றங்களையும் ஏற்படுத்தியது .   யுத்தத்தால் உல்லாசப்பயண வியாபாரம்படுத்த வேளையில் இப்பகுதி மக்கள் பாரிய பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டர்கள். வளங்கள் நிறைத்த கடலிருந்தும் அவர்களால் தொழில்செய்யமுடியவில்லை. காரணம் இருபது வருடங்களாக கடல்சார் தொழில்செய்யாததனால்
தொழில் அனுபவம் மறக்கப்பட்டதும், மீன்பிடித் தொழிலுக்கான உள்கட்டுமானம்  அழிக்கப்பட்டிருந்ததுமாகும். வறுமையைப் போக்க
பலகுடும்பங்கள் கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு
புலம்பெயர்ந்தனர். ஆண்கள் தங்களை கடற்படையிலும், இராணுவத்திலும்  இணைத்துக் கொண்டனர்.
பாணந்துற, பேருவள, ஹிக்கடுவ, காலி, மிசற, தங்கல போன்ற பிரதேசங்களை    உல்லாசப்பயண அபிவிருத்தியால் பாதிகப்பட்ட
முன்னாள் பெருமை மிகு மீன்பிடித்துறைகளுக்கு  ஊதாரணமாகக் கூறலாம்.
இவ்வாறு   தென்னிலங்கை மீனவர் சமூதாயத்தில் பொருளாதார வறுமை  நிலவியகாலமான
77 இக்கும் 83 இற்கும் இடைப்பட்ட காலத்தில் சிலஆயிரம் சிங்கள கடல்தொளிலாளர்கள்,  வடக்கில்
மன்னர், பொலிகண்டி, பருத்திதுறை, மயிலிட்டி, மண்டைதீவு, குருநகர், ஊர்கவர்துறை, தொண்டைமானாறு
போன்ற தமிழ்பிரதேசத்தில்   தமிழர்களுடன்  இணைந்து ஒன்றாக தொழில் செய்தார்கள் என்பதும், பலர் இப்பகுதிகளில் திருமண ஊறவை ஏற்படுத்திக்கொண்டார்கள்
என்பதும் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் நினைவிற்கொள்வது நன்று.
தமிழ் சிங்கள மீனவர்களுக்கிடையிலான ஊறவானது பல நூறாண்டு வரலாற்றை கொண்டது. சிங்கள மீனவர்களுக்கு படகுகட்டும் உதவியை பலநூறாண்டுகளாக
தமிழர்களே செய்தார்கள்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பருத்தியடைப்பு, நயினாதீவு, தோப்புகாடு, அராலி, வட்டுகோட்டை போன்ற பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பல பரம்பரையாக கப்பல் கட்டி வணிகம் செய்த வரலாறைக் கொண்டவர்கள்.  ஆங்கிலேய நீராவிக் கப்பல்கள் இவர்களின் பாய்கப்பல்  வணிகத்தை லாபமறதாக்கியதால் , சிறு வள்ளங்கள் செய்தும், மீன்பிடியில் ஈடுபட்டும் சீவியத்தை நடாத்தினர். இந்தக்  காலகட்டத்தில்  இச்சமுகத்தை சேர்ந்தவர்கள்   திருக்கோணமலை, புத்தளம்,  போன்ற தமிழ் பிரதேசங்களிலும்  கொழும்பு, ஜாஎல, சீதுவ போன்ற சிங்கள பிரதேசங்களில் குடியேறி மீன்பிடி மரக்கலங்கள்  ஊருவாகிக்னர்.
இதே சமூகத்தினர் தான் பிற்காலத்தில் சீ-நோர் நிறுவனத்தின் ஊடக கண்ணாடிஇளைப்படகு செய்யும் முறையை சிங்களப் பிரதேசங்களில் அறிமுகப்படுத்தினர்.
இதே போன்று வடமாராட்சி, மண்டைதீவு, குருநகர் பகுதியை சேர்ந்த கிறித்தவ மீன்பிடிச்சமூகம் நீர்கொழும்பு மீன்பிடி சமூகத்துடன் 83 ம் ஆண்டுவரை   நெருங்கிய நல்லுறவை கொண்டிருந்தனர். திருமணங்கள் கூட இந்த சமூகங்கள் இடையில் நடந்துள்ளது. சிங்கள மீனவச்சமூகம் JR  ஜெயவர்த்தன அரசின்  சுற்றுலா அபிவிருத்தியால்
பாதிகப்பட்டவேளை  மேற்ர் கூறிய சமூகத்தவர்கள் சிங்கள மீனவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கினர்.    இந்தியன் ராணுவ நடவடிக்கையில் பின் வந்தகாலத்தில் மேற்கண்ட சமூகத்தவர் பலர் நீர்கொழும்பு பகுதியில்  தற்காலிகமாக குடியேறினர். சிலர் அங்கு மீன்பிடியையும் தொழிலாக செய்தனர். இதற்கு அடிப்படைக் காரணம்
வரலாறு ரீதியான இந்த இருவேறு இனம் சார்ந்த மீன்பிடி சமூகங்களுக்கிடயிலான நெருங்கிய உறவேயாகும்.
இன்று குறும்தமிழ்தேசியம் பேசும் புலம்பெயர் இடதுசாரி வேடம்போட்டோர் நடாத்தும்  ஒர் இணயத்தில் இந்தியர் ஒருவர் தனது
கட்டுரையில்; கச்சதீவு அந்தோனியார்கோவில் திருநாள் தமிழ்நாடு மீன்பிடிசமூகமும், இலங்கை தமிழ் மீன்பிடிசமூகமும் தமது தொப்புள்கொடி உறவை வளர்க்கும் நிகழ்வாக ஊருகி  மருகி எழுதியிருந்தார். ஆனால் உண்மை அதுவல்ல . கடத்தல்காரர்கள் சந்திக்கும் நிகழ்வாகவும், பண்டமாற்று செய்யும் ஒரு இடமாகவும், கிறித்தவர்கள் தமது மதவழிபாட்டை செய்யும் நிகழ்வாகவுமே  கச்சதீவு அந்தோனியார்கோவில் திருநாள் இருந்தது.
இலங்கையில் இருந்து கிராம்பு, ஏலம், கறுவாப்பட்டை,     தேங்காய்எண்ணை யும்,  கோம்பாசோப்  , சந்தனசோப், ரேக்ஸ்சோனாசோப் போன்ற சவற்காரவகைகளையும் இலங்கையர்கள் கச்சதீவுக்கு கொண்டு போய், பண்டமாற்றாக பிளாஸ்டிக் பொருட்களையும் , காஞ்சிபுரம் பட்டுசேலைகள், கைத்தறிப் புடவைகளையும், வேட்டி, கிப்ப்ஸ் சாரம் போன்றவற்றையும் பெற்றுக்கொண்டனர்.
மேலும்  கச்சதீவு அந்தோனியார்கோவில் திருநாள் ஆனது குடும்பங்கள் பங்குகொள்ளும் விழாவல்ல. பெரும்பாலும் சிலநூறு இலங்கை- இந்திய  ஆண்கள் பங்குகொள்ளும் நிகட்சி.
ஆனால் தமிழ் மற்றும் சிங்கள கிறீஸ்தவ மீன்பிடிச்சமூகங்கள் மன்னார்
மாந்தை மடுமாதா  ஆலயத்தில் மீன்பிடி குறைந்த சோழகக்காற்று வீசும்    காலமான ஆவணியில்  சந்திப்பது பல
பரம்பரைகளாக நடைபெற்ற விடயம் . இது யுத்தம் துடங்கிய பின்னும் நடைபெற்றது . அதேபோன்று தமிழ் மீன்பிடிகார கிறீஸ்தவர்கள் நீர்கொழும்பு
தேவாலய திருவிழாவிலும், குறிப்பாக புத்தளம்
தனைவில்லு சந்தானாள் ஆலய திருவிழாவிலும் பங்குகொண்டதுடன் ,
அப்பிரதேசங்களில் வாழ்த்த சிங்களநட்புளின் குடும்பங்களை   தரிசித்தும் வந்தனர்.
மீன்பிடியில் ஈடுபடும் தமிழ்சைவர்கள் பலர்  தென்மன்னாரில் அமையப்பெற்ற அரிப்பு முதல்
முந்தல் வரையான பகுதிகளில் பறிக்கூடு மூலமும் , களக்கடல் வலைகள் மூலமும் தொழிலில்
ஈடுபடுவது வழக்கம். இதேபகுதியில் சிங்கள தொழிலாளர்கள் கரைவலை தொழிலில்
ஈடுபடுவதும், தமிழர்களும் , சிங்கள மீன்பிடிகாரரும் அருகருகு வாடிகளில் தங்கியிருப்பதும்
வழமை. இவர்கள் கூட வருடத்தில் சிலநாட்கள் உடப்பு பத்தினியம்மன் கோவில் திருவிழாவில்
கலந்து கொள்வது வரலாறு. இவ் வரலாறு புளொட் இயக்கம் நிகரவேட்டிய வங்கிக்கொள்ளை
நடத்தும் வரை தொடர்ந்தது.
இவ்வாறு பரம்பரை பரம்பரையாக தொழில் அடிப்படையிலும்
தனிப்பட்ட முறையிலும் இந்த இரு மீன்பிடிச் சமூகதிற்குள்ளும் இருந்த உறவு மறுபுறத்தில் சமூகச் சீரழிவுச்  செயற்பாடான   “கள்ளக் கடத்தல்” எனச்  சொல்லப்படும்  வடபகுதிமீனவர்களில் ஒரு பகுதியால் இந்தியாவில் இருந்து சட்டதிற்குமுரணாக கடத்தப்பட்ட
பொருட்களை சிங்களபிரதேசத்தில் சந்தைப்படுத்துவதற்கும், அப்பகுதிகளில் தமிழர்கள் வர்த்தக   நிறுவனங்களை அமைப்பதற்கும்
வழிவகுத்தது.
இவ்வுறவு பலகாலம் நின்று  நிலைப்பதற்கு பலகாரணங்கள் கூறலாம். முதல் முக்கிய காரணம் இரு பகுதியினரின் மீன்பிடிப் பொறிமுறை பெரும்பாலும்
வித்தியாசமானதாகும்.   உதாரணமாக
மேற்கூறியபடி அரிப்பு பிரதேசதிற்கும் புத்தளம் முந்தல்
பிரதேசதிற்கும் இடையில் தொழில்செய்த
சிங்களதொழிலாளர்கள் கரைவலைதொழில் ஈடுபட்டனர்.  பருவகாலத்தில் வடபகுதியை சேர்ந்தோர்
இப்பகுதியில் பறிக்கூடு, வலைபடுப்பு, கடலட்டை குளித்தல் போன்ற தொழில்ஈடுபட்டனர். இந்த இரு
பகுதியினராலும் குறிவைக்கப்படும் மீன்வகை கூட ஒரே வகையானதல்ல. இதனால் முரண்பாடுகள் சொல்லாகக் கூடிய அளவுக்கு
இருக்கவில்லை. இன்றும் இதேநிலை தான் உள்ளது. அடிப்படையில் இருபகுதியினரின் தொழில் பார்க்கும் முறையும், தொழில் செய்யும் பிரதேசங்களும் பெரும்பாலும் வெவ்வேறானதாகவே
உள்ளது.
இதை அடிப்படையாக் கொண்டே பருத்தித்துறை தொழிலாளி
ஒருவர் வீரகேசரி பத்திரிகைக்கு
சிங்களவர்களால் அல்ல, இந்திய மீனவர்களால் தான்
தமக்கு பாதிப்பென்று கூறினார்.  ஆனால் இந்திய குறும்தமிழ்தேசியவாதிகளும்  புலம்பெயர்
இடதுசாரி வேடம்போட்ட தமிழினவாதிகளும்
இணைந்து அத் தொழிலாளியை  சிங்களபேரினவாதிகளின் பேச்சாளர் என முத்திரைகுத்தினர்.
இன்று நீண்டகால யுத்தம், தமிழ் மீனவர் சமூகத்தின் புலம்பெயர்வு, சிங்கள சமூகத்தின் கல்வி வளர்ச்சி மற்றும் தொழில்ரீதியான சமூகமாற்றம் போன்ற காரணிகளால் இந்த இரு
சமூகதிற்குமான உறவு இன்று மங்கிய நிலையிலுள்ளதென்பது நிதர்சனம். ஆனால் இந்திய மற்றும்
புலம்பெயர் தமிழ் குறும்தேசிய, பாசிச சக்திகள் கூறுவது போல இவ்விரு மீன்பிடி
சமுகத்தினருகிடையில் மீன்பிடி தொழில்ரீதியாக முரண்பாடு நிலவுகின்றதென யாரா
வது கூறமுயன்றால்; அது குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க
முயல்வது போலாகும்.
அதேபோன்று இனப்பிளவை விரிவாக்க அயராது செயற்படும்
குறும்தேசியதுடன்  தமிழினவாதிகளுடனும் மகஇக போன்ற அமைப்புக்கள் கைகோர்ப்பது குழத்தைக்கலக்கி பருந்திற்கு
இரைகொடுத்தது போலாகும்.
நிறைவாக என் இளமைக் காலங்களிருந்து ஒரு நினைவு  நினைவு மீட்டல்  
எனது கிராமம் இலங்கையின் பொருளாதர அடிப்படையில், ஒப்பீட்டளவில் அனேகமாக நடுத்தரவர்க்க மீனவர்களைக் கொண்ட கிராமம். அங்கு எனது தந்தை வழி மாமா ஒருவர். அவரை ஐயாமாமா என்று நாங்கள் அன்பாக அழைப்போம். அவரை
எங்கு கண்டாலும் பக்கத்தில் வந்து ”ஒழுங்கா படிக்கிறியா மருமகன்” என்று விசாரித்து விட்டு, எனது சேட்டு பையில் பணம் வைத்து விட்டு போவார். அதில் குறைந்தது ஐம்பது ரூபாயாவது இருக்கும். நாங்கள் அவரை ஐயாமாமா என்று அழைத்தாலும், ஊருக்கு வெளியில் அவரை “சர்க்கரை சம்மாட்டி” என்று அழைப்பார்கள். சிறிமா ஆட்சிக் காலத்தில் அவர் பதின்மவயதில் இருந்தபோது, அதிகாலை வேளை அவர் கோர்வலை வைக்க கடற்கரை பக்கம் சென்றார். அங்கே கரையில் ஆளில்லாத கட்டுமரமொன்றில் சர்க்கரை மூட்டைகள் இருப்பதைக் கண்டார்.
கடத்தல்காரர்கள் கட்டுமரத்தை கரையில் விட்டுவிட்டு அருகிருந்த பற்றைக்கருகில் நித்திரை கொள்வதை கவனித்த அவர், கட்டுமரத்துடனும், சர்க்கரை மூட்டைகளுடனும் தலை மறைவானார். பலவருடங்கள் கழித்து எழுபத்தி ஒன்பதாமாண்டு, Toyota Rosa வாகனத்தில் நான்கு பிள்ளைகளுடனும் மனைவியுடனும் ஊரில் வந்து இறங்கினார். ஊரில் அவரின் மனைவியை சிங்களத்தி என கிசுகிசுத்தனர். நெருங்கிய அவரின் குடும்பத்தினர் அவர் மனைவி தமிழச்சி தான் என்றும், அவர்கள் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு சரியாக தமிழ் தெரியாதெனவும் கூறினார். மாமா வரும் போது தனக்கு சொந்தமாக ரோசா மினி பஸ்சுடன் மட்டும் வரவில்லை. எமது ஊருக்கு முதன்முதலாக உள்ளக இயந்திரம் இணைத்த பாரிய மரத்தாலான படகுடன் தொழிலுக்கு தேவையான, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்த நவீன வலைகள் உபகரணங்களுடனும் வந்திருந்தார். உபகரணங்களும் படகும் அவரின் மனைவியின் உறவினர்களும் சில தென்னிலங்கை தொழிலாளிகளும் கடலால் கொண்டுவந்தனர். ஊரே வாயில் விரலை வைத்து அதிசயமாகப் பார்த்தது. இவ்வாறு சர்க்கரை கடத்தியவனிடமிருந்து இவர் களவாடியதனாலும், அதை வைத்து படகு வேண்டியதும் தான் இவர் “சர்க்கரைச் சம்மாட்டி” என்று அழைக்கப்பட்டதன் பின்னணி. சம்மாட்டி என்றால் வழமையாக “முதலாளியாகவே” விளங்கி கொள்ளும் தன்மை கடற்தொழிலுக்கு சம்பந்தமில்லாதவர்களிடமுண்டு. வழமையாக முதலாளிகள் தொழிலாளிகளுக்கு நாட்கூலி, அல்லது மாதக்கூலி கொடுப்பது வழக்கம். ஆனால் இலங்கை மீன்பிடிச்சமூகத்தில் அது சிங்களவன் ஆனால் என்ன தமிழன் ஆனால் என்ன, கூலி கொடுக்கும் வழமை எந்தக்காலத்திலும் இருந்ததில்லை. இலங்கையில் பங்குமுறை தான் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றது. உதாரணமாக பிடிக்கப்படும் மீனின் வருமானத்தில், எரிபொருள், மற்றும் தொழிலாளிகளின் சாப்பாட்டுச்செலவு போக, மீதமானது படகும் வலையும் ஒருவருக்கு சொந்தமானால் அவருக்கு இரண்டு பங்கும் தொழிலாளிகளுக்கு ஆளுக்கு ஒரு பங்கும் வழங்கப்படும். வள்ளம் வலை வைத்திருப்பவர் கடன் வாங்கி, வட்டி கட்டினால் அதற்கு தொழில் நன்றாக இருக்கும் போது ஒரு பகுதியை ஒதுக்குவர். அதேபோன்று ஒரு தொழிலாளியின் குடும்பத்தில் ஏதாவது நல்லது, கெட்டது நடந்தால் ஒருநாள் உழைப்பையோ அல்லது உழைப்பின் ஒரு பகுதியையோ வழங்குவதும் வழமை. இதில் கிராமத்திலுள்ள மற்ற தொழிலாளர்களும் பங்கெடுப்பது இயல்பாக நடப்பதொன்று. இதேபோலவே கிராமங்களில் பள்ளிக்கூடம் திருத்துதல், கோவில் திருவிழா, வீதி செப்பனிடல் போன்ற பொது செலவுகளுக்கும் உழைப்பை வழங்குவர். இதை “உழைப்பெடுத்தல்” என்று கூறுவர்.
சர்க்கரைச் சம்மாட்டி எனது மாமனும்; சமுதாய வழமைக்கேற்ப பங்கு வழங்கி தொழில் நடத்துபவராக விளங்கினார். எண்பத்தி மூன்றாம் ஆண்டிற்கு பிற்பாடு கடல்வலைய மீன்பிடி தடைச்சட்டம் இலங்கை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சர்க்கரை மாமாவின் தொழில் முடக்கப்பட்டது. எண்பத்தி ஆறாம் வருடம் முற்றாக தொழில் செய்ய முடியாததனால் அவரின் இயந்திரப்படகு கரையில் ஏற்றப்பட்டிருந்தது. அந்தக் காலப்பகுதியில் காரைநகர் கடற்படை முகாமை சேர்ந்த வீரய சூரைய என்ற பீரங்கிப் கப்பல் கடலில் இருந்து கரையை நோக்கி எந்தவிதக் காரணமும் இல்லாமல் குண்டுமழை பொழிவது வழக்கம். இதனால் மீன்பிடி சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர். வீடுகளும், கரையில் நின்ற படகுகளும், உபகரணங்களும் அழிக்கப்பட்டது. எண்பத்தாறாம் வருடம் சித்திரை மாதத்திலொரு நாள் வீரய சூரைய பீரங்கியின் குண்டுகள் சர்க்கரை மாமாவின் கரையோரமிருந்த அவரின் வீட்டையும், அதன் முன் ஏற்றியிருந்த படகையும் முற்றாக அழித்தன. குண்டு விழுந்து படகு தீப்பற்றி எரிந்தது. குடும்பத்தினர் காயங்களுடன் உயிர்தப்பினர். றிபிள்பைவ் சிகரட்டுடன், கிப்ஸ் சாறமும் வெள்ளைச் சேட்டும் அணிந்து கம்பீரமாக வலம் வந்தவர், குறுகிப்போனார். வறுமை தாக்கியது. மூத்தமகளுக்கு சீதனம் கொடுக்கக் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் அடைக்க முடியாமல் திண்டாடினார். அதுவரை தமிழ் தேசியவிடுதலைப் போராட்டம் பற்றி எந்தக் கருத்தும் இல்லாதிருந்தவர் திடீர் தேசியவாதியானார். மூன்று மகன்களில் ஒருவர் புலியில் சேர்ந்தான். மற்ற இருவரும் கல்வியை நிறுத்தி விட்டு நாளாந்த சீவியத்தை கவனிக்க கரைசார் கடற்றொழிலில் ஈடுபட்டனர். பின் வந்த காலத்தில் றிபிள்பைவ் சிகரட் வாங்க வசதியில்லாவிட்டாலும் ஆர்விஜி பீடி கையில் ஏந்தியபடி பழைய கம்பீரத்துடன் அவர் தமிழ்ஈழ ஆதரவாளராக வலம் வந்ததுடன் வன்னிக்கு புலம்பெயர்ந்து தொழில் செய்தார். முள்ளிவாய்க்கால் அவலத்தில் எல்லாம் இழந்தவர்; ஊர் திரும்பி மறுபடியும் தனது பிள்ளைகளுடன் கடற்றொழில் செய்து வயிற்றைக் கழுவ முயலுகின்றார். அன்று படகும் வீடும் அழிந்தபோது தேசியவாதியாகி தமிழீழம் தான் முடிவென்று தன் பிள்ளையை போராட அனுப்பியவர். இன்று அதே பிள்ளைகளுடன், அவர் தனது குடும்பத்தின் அன்றாட செலவுக்காக கடலில் இருந்து வரும் வருமானத்தை தடுக்கும் இந்திய அழிவு மீன்பிடியை எதிர்த்து மாதகல் கரையிலும், பருத்தித்துறை முனையிலும் சகதொழிலாளிகளுடன் இணைந்து போராடுகிறார். அன்று அவர் படகும் வீடும் அழிந்தபோது;   சரி பிழைகளுக்கப்பால் அவரது அரசியல் அபிலாசையைப் பயன்படுத்த ஏதோ ஒரு சக்தி அன்று இருந்தது. இன்று அவர் அன்றாடம் காச்சியாகி, நாளாந்த சோற்றுக்கே கஸ்டப்படும் வேளை அவரின் நியாயமான போராட்டத்தை நெறிப்படுத்தவோ, ஆதரவு வழங்கவோ இன்று ஒருவருமில்லை.
முற்றும்

பிற்குறிப்பு ;
இலங்கையில் பல காலம் யுத்தம் நடந்ததால் வடபகுதியின்
மீன்பிடிசம்பந்தமான தரவுகளைப்  பெற்றுக்  கொள்வது   இலகுவான விடயமல்ல . வடபகுதி அரச அலுவலகங்களில் கிடைக்கும் தகவல்கள் பல வருட கால பழைமையானவை அல்லது அரைகுறையானவை . இதற்கு காரணம் இன்று மீன்பிடி தொடர்பான அரசுசார் நிறுவனங்களில் அதிகாரிகளாக இருப்போர் பெரும்பான்மையானோர் கடல்சார் கல்வி கற்றவர்களோ அல்லது கடல்தொழில் அனுபவம் கொண்டவர்களோ அல்ல. அவர்களுக்கு அடிப்படை மீன்பிடி சம்பந்தமான விடயங்களே தெரியாதுள்ளது.  ஆனால் இன்நிலைக்கு மாறானது தென்இலங்கை நிலைமை.      இக் காரணைதினால் தகவல்களைச்  சரிபார்க்க வடபகுதியின்
மீனவர்  சங்கங்களும் பல தனிநபர்களும் உதவி புரிந்தனர். அவர்கள் அனிவருக்கும் நன்றிகள்.
மேலும் இக்கட்டுரையில்   சொல்லப்பட்டுள்ள கடல்சார் தொழில் நுட்பம் சம்பந்தமான  தகவல்கள் கூடுமான அளவுக்கு, கடல்சார் வல்லுனர்களால்  சரி பார்கப்பட்டே பிரசுரிக்கப்பட்படுள்ளது.
உசாத்துணை :  
* Anders Jensen J:  The story of Norwegian cod fisheries
*  Marine Resource Economics, Vol. 18., 2003 . Harvest Functions: The  Bottom Trawl Fisheries
* Massachusetts Division of Marine Fisheries : Technical Report TR-38
* பாட்டாவழிச்சமூகம் வட்டுக்கோட்டை    : வணிகர்வரலாறு
* Commissioner of Fisheries, Chennai-6 : Tamilnadu fisheries development 2007-2008
* Director of Marine Products Export Development Authority, Chennai: Marine Products Export 2007- 2008
* Ministry of fisheries and aquatic resources, Sri Lanka : Framework of the fisheries and aquatic resources secter 2007-2016
படங்கள்:  
Fisheries Research Division, University of Tromsø, Norway
Source: Manalai Mainthan